×

சென்னையில் உள்ள 21 சுரங்க பாதைகளும் தண்ணீர் தேங்காத வகையில் கண்காணிக்கபட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் பல்வேறு இடங்க்களில் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர். சென்னை ரிப்பன் மாளிகையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை எற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: 2021-ம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் 2022-ம் ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை, அதேபோல் 2022-ம் ஆண்டிற்கு பிறகு 2023-ம் ஆண்டு ஜூன் மாததில் பெய்திருக்க கூடிய மழை 27 ஆண்டுகளுக்கு பிறகு பெருமழை ஒரேநாளில் பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு இடைபட்ட 6 மாத காலத்தில் எடுக்கபட்ட நடவடிக்கையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது நீர் தேங்கவில்லை என்று கூறினார். சென்னையில் உள்ள 21 சுரங்க பாதைகளும் தண்ணீர் தேங்காத வகையில் கண்காணிக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

The post சென்னையில் உள்ள 21 சுரங்க பாதைகளும் தண்ணீர் தேங்காத வகையில் கண்காணிக்கபட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Shekharbabu ,Tamil Nadu government ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி